search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
    X

    கோவையில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

    • அபிலாஷ் இளம்பெண்ணின் அழகில் அபிலாஷ் மயங்கினார்.
    • அபிலாஷ் தற்கொலை செய்வது என முடிவு சென்றார்.

    கவுண்டம்பாளையம்,

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 20).

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அதே மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் அழகில் அபிலாஷ் மயங்கினார். கடந்த சில மாதங்களாக அவர் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.

    சம்பவத்தன்று அபிலாஷ் இளம்பெண்ணை சந்தித்து தனது காதலை ஏற்குமாறு கூறினார்.

    ஆனால் இளம்பெண் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த அபிலாஷ் தற்கொலை செய்வது என முடிவு சென்றார்.

    அதன்படி மில் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து மில் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் ஒருதலை காதல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அபிலாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×