என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் பிரசவத்தின் போது காதல் மனைவி இறந்ததால் வாலிபர் தற்கொலை
- வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கில் தொங்கினார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள பிச்சனூர் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(27). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கவுசல்யா பிரசவத்தின் போது பரிதாபமாக இறந்தார்.
காதல் மனைவி இறந்ததால் மன வேதனை அடைந்த மகேந்திரன் மது பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கே.ஜி.சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






