என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மூடப்படும்கலெக்டர் அறிவிப்பு
- மனமகிழ் மன்றம் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
- கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக் டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் அரசு மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும். மேற்படி நாளில் அனைத்து பார்கள் மற்றும் அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டும். மேலும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்கிழமை) சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை மேற்கொண்டால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கள் மற்றும் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






