என் மலர்
உள்ளூர் செய்திகள்

தார்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்ட போது எடுத்தபடம்.
தூத்துக்குடி தனசேகரன்நகர் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
- தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய தார்சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன.
- தனசேகரன்நகர் கிழக்கு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பணிகள் முழுமையாக நல்ல முறையில் நடைபெறு கிறதா? என்று சூழற்சி முறையில் எல்லா பகுதி களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 13-வது வார்டுக்குட்பட்ட தனசேகரன்நகர் கிழக்கு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.






