search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், வருகிற 28-ந்தேதி குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமை பொது ஏலம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

    தஞ்சையில், வருகிற 28-ந்தேதி குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமை பொது ஏலம்- கலெக்டர் தகவல்

    • குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • காலை 11 மணி அளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை சரகத்தில் உள்ள வலையன்குளம், அய்யனார் குளம், நரியன் குளம் ஆகிய குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை 1432-ம் பசலிக்கு பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை எடுக்க விரும்புவர்கள் எண்.873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட வேண்டும். அந்த அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×