search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை- நாகை சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    X

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம் நடந்தது.

    தஞ்சை- நாகை சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

    • கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.
    • தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பேரவை கூட்டம் கொரடாச்–சேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார்.

    பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்ட சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சிபிஎம் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது,

    தஞ்சாவூர் முதல் நாகை வரையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணி நீண்ட வருடங்களுக்கு பின் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனாலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் வேளாங்கண்ணி மற்றும் நாகப்பட்டினம், திருவாரூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி மற்றும் பல நகரங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தற்போது திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. மேலும் தற்போது பெய்த மழையில் பல இடங்களில் சாலை சீர் குலைந்து, குண்டும், குழியுமாக மாறி அபாயகரமான சாலையாக காட்சியளிக்கிறது. தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    ஆகவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி திருவாரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து மேற்கோண்டு மக்கள் பயன்பாட்டு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×