என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூர் குமாரபாளையத்தில் தண்டுமாரியம்மன் கோவில் திருவிழா
- பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து வழிபாடு
- காலை 11 மணிக்கு மறுபூஜை மற்றும் மஞ்சல் நீராட்டு விழா நடந்தது
மேட்டுப்பாளையம்,
கோவை அன்னூர் அருகே அ.குமாரபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு க்கான திருவிழா கடந்த 26-ந் தேதி பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
அதன்பின் 27-ந் தேதி அலங்கார பூஜைகளும், அதனை தொடர்ந்து தண்டுமாரியம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜைகளும் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் வாசுதேவன் குழுவினரின் பஜனை நிகழ்சியும், சக்தி கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று காலை 6 மணியளவில் பொங்கல் வைக்கும் நிகழ்வும், 10 மணிக்கு மாவிளக்கு எடு த்தல், மதியம் 12 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை, மாலை 3 மணிக்கு அலகு குத்தி தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மறுபூஜை மற்றும் மஞ்சல் நீராட்டு விழா நடக்கிறது. இந்நிகழ்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்த னர்.






