என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை- நோயாளிகள் அதிர்ச்சி
- தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
- பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியில் டிரங்க் சாலையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






