search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது குடித்ததை மனைவி கண்டித்ததால் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை
    X

    மது குடித்ததை மனைவி கண்டித்ததால் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை

    • கீழே விழுந்து மயங்கிய வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகரை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் சுப்பிரமணி (வயது 32).

    இவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்றிரவு சுப்பிரமணி அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி உள்ளார். பின்னர் மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியை பிடித்தபோது அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் கீழே விழுந்து மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×