search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் புலிக்குகை வளாகத்தில் வாலிபர் தற்கொலை- சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
    X

    மாமல்லபுரம் புலிக்குகை வளாகத்தில் வாலிபர் தற்கொலை- சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

    • மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விரைந்துவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், புலிக்குகை உள்ளிட்ட புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்றுமாலை சாலவான் குப்பம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 'புலிக்குகை' வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குறைவாக இருந்ததால் இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியருக்கும் மாமல்லபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்துவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்த முருகன் (வயது39) என்பது தெரிந்தது. பிளம்பராக வேலைபார்த்து வந்த அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×