search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே தலையில் கல்லைபோட்டு வாலிபர் படுகொலை
    X

    பழனி அருகே தலையில் கல்லைபோட்டு வாலிபர் படுகொலை

    • திண்டுக்கல்-கோவை செல்லும் சாலையில் ஆற்றுப்பாலத்தில் தலையில் கல்லைபோட்டு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • நேற்று இரவு வீட்டைவிட்டு சென்றவர் இன்று காலை ஆற்றுப்பாலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

    பழனி:

    பழனி அடுத்துள்ள மானூர் ஆற்றுப்பாலத்தில் இன்று காலை ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி டி.எஸ்.பி சரவணன் தலைமையில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    திண்டுக்கல்-கோவை செல்லும் சாலையில் ஆற்றுப்பாலத்தில் தலையில் கல்லைபோட்டு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது பழனி மானூர் அண்ணாநகரை சேர்ந்த காளிமுத்து மகன் சிவா(23) என தெரியவந்தது.

    கூலிவேலை பார்த்து வந்த இவர் அவ்வப்போது இரவில் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வீட்டைவிட்டு சென்றவர் இன்று காலை ஆற்றுப்பாலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×