என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: தந்தை-மகன் தப்பி ஓட்டம்
    X

    குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: தந்தை-மகன் தப்பி ஓட்டம்

    • தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தமிழ்வாணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
    • குடிபோதை தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள சதாவரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது23). இவரும் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவரும் நண்பர்கள்.

    நேற்று இரவு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் குணாவின் தந்தை ரகு அங்கு வந்தார். அவர் மகனிடம் தகராறில் ஈடுபட்ட தமிழ்வாணனை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. ரகுவும், அவரது மகன் குணாவும் சேர்ந்து தமிழ்வாணனை தாக்கினர்.

    மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் அரிவாளால் தமிழ்வாணனை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தமிழ்வாணன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    உடனே ரகுவும், அவரது மகன் குணாவும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய தமிழ்வாணணை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் தமிழ்வாணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ரகு மற்றும் குணாவை தேடி வருகின்றனர். குடிபோதை தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×