என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் அருகே இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
- இளம்பெண் ஒருவர், தான் குளிப்பதை வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்ததாக பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- இளம்பெண் குளிப்பதை செல்போன் மூலம் வீடியோ எடுத்த பட்டீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் குளிப்பதை வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்ததாக பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இளம்பெண் குளிப்பதை செல்போன் மூலம் வீடியோ எடுத்த பட்டீஸ்வரன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






