என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களியக்காவிளை அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
- மாணவி வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த வாலிபர் அத்துமீறி வீட்டினுள் நுழைந்து மாணவியை மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
- மாணவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே பாலோடு கலூர் பகுதியை சேர்ந்த வாலிபர் உண்ணிக்குட்டன் (வயது 26). இவர் படிப்பு முடித்து விட்டு வேலை தேடிவந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
காலையில் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு செல்லும் மாணவியை வாலிபர் ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் மாணவி உண்ணிக்குட்டனிடம் உள்ள பழக்கத்தை நிறுத்தினார். இதனால் வாலிபர் மாணவியிடம் கடும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் மாணவி செல்லும் இடங்களில் எல்லாம் வாலிபர் சென்று மாணவியை மிரட்டினார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார்.
இந்த நிலையில் மாணவி வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த வாலிபர் அத்துமீறி வீட்டினுள் நுழைந்து மாணவியை மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மாணவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர்.
அதற்குள் வாலிபர் கதவை சாத்தி விட்டு தான் தற்கொலை செய்ய போவதாக மிரட்டியுள்ளார். ஊர் மக்கள் கதவை உடைத்து வாலிபரை மடக்கி பிடித்துள்ளனர்.
இதுகுறித்து பாலோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வாலிபரின் செல்போனை பறிமுதல் செய்து வாலிபர் உண்ணிகுட்டன் வேறு ஏதாவது பெண்களை இப்படி மிரட்டி உள்ளாரா? என்று விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாலோடு போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்