search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் கள்ளக்காதலன் வீட்டில் பெண் கழுத்தறுத்து கொலை
    X

    மதுரையில் கள்ளக்காதலன் வீட்டில் பெண் கழுத்தறுத்து கொலை

    • கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 43). இவர் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மாவு மில்லில் பணியாற்றி வந்தார்.

    அப்போது இவருக்கும், அங்கு வேலை பார்த்த சிந்தாமணி கங்காநகரை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாண்டியம்மாள், செல்வம் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை அவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியம்மாளை கொலை செய்தது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×