search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே ரவுடி தம்பி கொலையில் 6 பேர் கைது
    X

    வானூர் அருகே ரவுடி தம்பி கொலையில் 6 பேர் கைது

    • விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
    • போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விமல் ஓட்டலுக்கு வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்து,ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமலின் மோட்டார் சைக்கிளை அந்த 6பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை சுற்றிவளைத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர்.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்துபோன விமலும், விமலின் அண்ணன் வினோத் இருவரும் புதுச்சேரி மாநிலம் ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்தவர்கள். 2019-ஆண்டு ரவுடி சோழன் குரூப்பிற்கும் மற்றொரு ரவுடி ஜனாகுரூப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்த வினோத்தை ஜனா குரூப்பினர் வெட்டிக் கொன்றது. இதனால் வினோத்தின் சாவிற்கு பழிக்குப்பழி தீர்ப்பதற்காக வினோத்தின் தம்பி விமல் ஜனாவை கொல்வேன் என்று அனிச்சகுப்பத்தில் உள்ள ஜனாவின் மாமாவிடம் சென்று கூறினார். உடனே ஜனாவின் மாமா இந்த செய்தியை ஜனாவிடம் கூறினார்.

    இதனால் ஜனா முதற்கட்டமாக விமலை தீர்த்துகட்ட வேண்டும் என முடிவெடித்து ஜனா குரூப்பை சேர்ந்த கீழபுத்துப்பட்டு செல்வராசு மகன் ஜனா (வயது 32), ரவி மகன் அரவிந்த் (22), புதுச்சேரி லாஸ்பேட்டை தண்டபாணி மகன் உதயகு மார் (26), நாகராஜ் மகன் கார்த்திகேயன் (32), பவழ நகர் சரவணன் மகன் லோகேஷ் (23), காலாப்பட்டு ஜில்பட் மகன் தாமஸ் (23), ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கடந்த ஒரு வாரமாக விமல் எங்கெங்கு செல்கிறார் என்று நோட்டமிட்டு நேற்று விமலை சுற்றிவளைத்து கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.

    மேலும் இதுகுறித்து கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தனிப்படை அமைத்து அந்த 6 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில் அவர்கள் ஆரோவில் அருகே உள்ள முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே முந்திரிதோப்பிற்கு விரைந்த கோட்டக்குப்பம் போலீசார் அங்கு பதுங்கி இருந்த ஜனா, அரவிந்த், உதயகுமார், கார்த்திகேயன், லோகேஷ், தாமசை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×