search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    சிசிடிவி கேமிராவை இன்ஸ்பெக்டர் ஆய்வு


    எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

    • காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
    • வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கீரைக்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கள்ளக்குறிச்சியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார். திண்டிவனத்தில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. இன்று காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.

    இது குறித்து அவர்கள் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் திண்டிவனம் விரைந்து வந்தார். வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சுதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் சரவணன் வீட்டின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 3 குழுக்களாக பிரிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். திண்டிவனம் பகுதியில் அடிக்கடி கொள்ளை மற்றும் திருட்டு நடைபெற்று வருகின்றது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×