search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் போட்டியிடாத பொள்ளாச்சி தொகுதி
    X

    பெண்கள் போட்டியிடாத பொள்ளாச்சி தொகுதி

    • பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
    • நாம் தமிழர் கட்சி இழந்த கரும்பு விவசாயி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை ஆகிய சின்னங்களில் வேறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 29 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    தொடர்ந்து 28-ந்தேதி நடைபெற்ற வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    மீதம் உள்ள 11 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

    வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 3 பேர் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

    தொடர்ந்து பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் ஈஸ்வரசாமி (தி.மு.க) உதயசூரியன், கார்த்திக் அப்புசாமி (அ.தி.மு.க) இரட்டை இலை, வசந்தராஜன் (பா.ஜனதா) தாமரை, சுரேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி) மைக் சின்னம் என 15 பேர் களமிறங்கி உள்ளனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் ஒருவர் கூட பெண் இல்லை.

    மேலும் நாம் தமிழர் கட்சி இழந்த கரும்பு விவசாயி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை ஆகிய சின்னங்களில் வேறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×