search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - பள்ளிக் கல்வித்துறை
    X

    பள்ளிக் கல்வித்துறை

    தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - பள்ளிக் கல்வித்துறை

    • 9-ம் வகுப்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
    • 9-ம் வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    9-ம் வகுப்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அவர்களால் 'ஆல்பாஸ்' பட்டியலில் சேர்ந்து 10-ம் வகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு 9-ம் வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அதிகாரிகளும், பள்ளி நிர்வாகத்தினரும் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×