என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை வழக்கில் ஜாமினில் வந்த சென்னை வாலிபர் தற்கொலை
    X

    கொலை வழக்கில் ஜாமினில் வந்த சென்னை வாலிபர் தற்கொலை

    • வீட்டில் தனியாக இருந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 19). இவர் மீது சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ள நிலையில் அண்மையில் இவர் ஜாமினில் வெளியே வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சஞ்சய் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அங்கிருந்தவாறு அவர் அந்த பகுதியில் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது சஞ்சய் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரம்பாக்கம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று சஞ்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அதில் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நிலையில் சஞ்சய் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.

    Next Story
    ×