என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
- மதுபோதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாகவும், சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
- கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7 லட்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பஜார் வீதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த மையத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையன் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (32) என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாகவும், சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
கைதான யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7 லட்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.






