என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாமல்லபுரம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
Byமாலை மலர்3 Jun 2023 6:21 AM GMT (Updated: 3 Jun 2023 6:21 AM GMT)
- கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவர் மணிகண்டன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
- மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி காவ்யா (வயது21). இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமானது. கணவன்-மனைவி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவர் மணிகண்டன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
இதையடுத்து காவ்யாபட்டிபுலம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். கணவர் இறந்த துக்கத்தில் விரக்தியில் இருந்து வந்த காவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X