search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரத்தில் 70 ஆண்டு பழமையான அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம்
    X

    மாமல்லபுரத்தில் 70 ஆண்டு பழமையான அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம்

    • சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    வடக்கு மாமல்லபுரம் கிராம பொதுக் கோவிலான, கங்கையம்மன், ஊத்துக்காட்டு அம்மன் கோயிலில் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னிதி விமானங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    70ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகத்தைகான தேவநேரி, வெண்புருஷம், பட்டிபுலம், கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி, பெருமாளேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    கோவிலின் தர்மகர்த்தா ராமலிங்கம், செயலாளர் லோகநாதன், பொருளாளர் பழனிவேல், கிட்டு, கேசவன், அன்பு, ரங்கநாதன், ஜெயராமன், கவாஸ்கர், மகேஷ் மற்றும் வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×