search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
    X

    ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

    • சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரெயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் தாம்பரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். மேலும் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது பிடிப்பட்ட நபர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சையது அனீஸ் (வயது 25), முகமது முஸ்தபா (26), என்பது தெரியவந்தது. இவர்கள் திரிபுரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக எடுத்து வந்து குன்றத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×