search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.டி. பெண் ஊழியர் கழுத்து நெரித்து கொலை- 3 பேர் கைது
    X

    ஐ.டி. பெண் ஊழியர் கழுத்து நெரித்து கொலை- 3 பேர் கைது

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பூமாண்ட கவுண்டனூரைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி (63). இவரது மனைவி தமயந்தி. இவர்களுக்கு பூரணி (28) என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர்.

    கவுந்தப்பாடி அடுத்த சின்னியம் பாளையத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (53). இவரது மனைவி பூங்கொடி (51). இவர்களின் மகன் மதன்குமார் (29).

    இந்த நிலையில் பூரணி கல்லூரியில் படிக்கும் போது மதன்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு பூரணியும், மதன்குமாரும் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். தொடர்ந்து இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இதற்கிடையில் பூரணியிடம் அவரது பெற்றோர் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்டு மாதம் பூரணியை பிரசவத்திற்காக கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    அப்போது குழந்தை மற்றும் பூரணியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் வந்தனர். அப்போது பூரணியை பார்க்கக் கூடாது என்று மதன்குமாரும் அவரது தாயார் பூங்கொடியும் திருப்பி அனுப்பி விட்டதாகவும், குழந்தையை பார்க்க சென்ற பூரணியின் உறவினர்களை திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் சின்னியம்பாளையத்தில் உள்ள பூரணியில் பக்கத்து வீட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து பூரணிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை அதனால் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரி கொண்டு செல்கிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

    கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு பூரணியை கொண்டு சென்று அங்கு பரிசோதித்த உடன் அங்கிருந்து அதே ஆம்புலன்சில் கோபி சத்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கிருந்து கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பூரணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று கவுந்தப்பாடி போலீசில் பூரணியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கோபி வருவாய் கோட்டாட்சியர் பிரிய தர்தர்சினி தலைமையில் விசாரணை நடந்தது. மேலும் கோபி டி.எஸ்.பி தங்கவேல் விசாரணை நடத்தினார். பின்னர் பூரணி உடல் பிரேத பரிசோதனை பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.

    பிரேத பரிசோதனை முடிவில் பூரணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதன்குமார் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார்.

    இதுகுறித்து பூரணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் திரண்டு வந்து தலைமறைவாக இருக்கும் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கோபி அடுத்த ஒத்தக்குதிரை பகுதிகளில் பதுங்கி இருந்த பூரணியின் கணவர் மதன்குமார், மாமனார் யுவராஜ், மாமியார் பூங்கொடி ஆகியோரை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோபி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    பின்னர் மதன்குமார் மற்றும் யுவராஜா ஆகியோர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். பூங்கொடி கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×