search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
    X

    தாம்பரம் அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

    • ராஜம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் கொள்ளை போனது தெரிய வந்தது.
    • ராஜம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் வேல்நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது70). தனியாக வசித்து வந்த இவர் டெய்லரிங் வேலை செய்து வந்தார்.

    மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கச் சென்றார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் இவரது வீடு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ராஜம்மாளின் வீட்டில் சென்று பார்த்தனர். அங்கு ராஜம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பீர்க்கங்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜம்மாள் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது ராஜம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் கொள்ளை போனது தெரிய வந்தது.

    ராஜம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரை கொலை செய்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் பீர்க்கங்கரணை ஏரிக்கரை தெருவில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்திலும் கொள்ளை நடந்தது. கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் கருவறையில் இருந்த ஐம்பொன் சிலையை திருடி சென்றார். இதே கோவிலில் 4-வது முறையாக திருட்டு நடந்து உள்ளது.

    இந்த இரு வேறு சம்பவங்களில் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    Next Story
    ×