search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரும்பாக்கத்தில் போலீஸ் என்று மிரட்டி நகை-பணம் பறிப்பு: பட்டதாரி வாலிபர் கைது
    X

    அரும்பாக்கத்தில் போலீஸ் என்று மிரட்டி நகை-பணம் பறிப்பு: பட்டதாரி வாலிபர் கைது

    • எம்.பி.ஏ. பட்டதாரியான பாலாஜி என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • பாலாஜி சூளைமேடு பகுதியில் போலீஸ் என கூறி தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    அரும்பாக்கம் பகுதியில் போலீஸ் என்று மிரட்டி வாலிபர் ஒருவரிடம் பணம் பறிக்கப்பட்டது. ரூ. 92 ஆயிரம் பணம், அரை பவுன் தங்க நகை ஆகியவற்றை பறித்தது தொடர்பாக அரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் எம்.பி.ஏ. பட்டதாரியான பாலாஜி என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. முன்னாள் ஊர்க்காவல் படை வீரரான பாலாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகியுள்ளார். இதன்பின்னர் பாலாஜி சூளைமேடு பகுதியில் போலீஸ் என கூறி தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×