search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷ சாராய மரணம்: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி.க்கள் தலைமையில் குழு விசாரணை
    X

    விஷ சாராய மரணம்: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி.க்கள் தலைமையில் குழு விசாரணை

    • விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • உயிர் பிழைத்த 65 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிர் பிழைத்த 65 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த வழக்கு உள்ளூர் போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வழக்கின் கோப்புகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் இருக்கக்கூடிய சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளையும் விசாரணை குழுவில் அதிகாரிகள் சேர்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் இருந்து டி.எஸ்.பி. சசிதர் மற்றும் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு நேரில் விசாரணை நடத்த விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று சென்றுள்ளனர்.

    Next Story
    ×