என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி ஸ்நேக்பாபு கைது
    X

    அம்பத்தூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி 'ஸ்நேக்'பாபு கைது

    • இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரவுடி ‘ஸ்நேக்’ பாபுவை கைது செய்தனர்.
    • குற்றச்செயல்களில் ஈடுபடும் இடங்களில் பாபு சிக்காமல் பாம்புபோல் வேகமாக தப்பி செல்வதால் அவரை நண்பர்கள் ஸ்நேக்பாபு என்று அழைத்து வந்து உள்ளனர்.

    அம்பத்தூர்:

    சோழவரம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்று வரும்போது வழுதிகை மேடு, ஞாயிறு கிராமம் பகுதியை சேர்ந்த ரவுடியான பாபு என்கிற ஸ்நேக்பாபு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

    சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு சென்று வந்தபோது ரவுடி ஸ்நேக்பாபு வழிமறித்து மிரட்டினார். மேலும் மாணவியை தனது மோட்டார் சைக்கிளிலில் அமர வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து மாணவியின் தாய் அம்பத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரவுடி 'ஸ்நேக்' பாபுவை கைது செய்தனர். அவர் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளன.

    குற்றச்செயல்களில் ஈடுபடும் இடங்களில் பாபு சிக்காமல் பாம்புபோல் வேகமாக தப்பி செல்வதால் அவரை நண்பர்கள் ஸ்நேக்பாபு என்று அழைத்து வந்து உள்ளனர். தற்போது ஸ்நேக்பாபு போலீ சாரின் பிடியில் சிக்கி உள்ளார்.

    Next Story
    ×