search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர்-கட்டிட தொழிலாளி கைது
    X

    10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர்-கட்டிட தொழிலாளி கைது

    • தந்தையாக இருக்க வேண்டிய கார்த்திக், சிறுமி என்றும் பாராமல் மாணவிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • கட்டிட தொழிலாளி முருகானந்தம் என்பவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 2016ம் ஆண்டு இறந்து விட்டார். இதன் காரணமாக இவரது தாயார் மகளுடன் சகோதரரின் பராமரிப்பில் இருந்தார்.

    இந்த நிலையில் மாணவியின் தாயாருக்கும், தனியார் பள்ளி வேன் டிரைவர் சுந்தர்ராஜ் என்ற கார்த்திக் (வயது 31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தாயார் வேன் டிரைவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    தந்தையாக இருக்க வேண்டிய கார்த்திக், சிறுமி என்றும் பாராமல் மாணவிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகானந்தம் (31) என்பவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இந்த கொடூரம் 5 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்துள்ளது. மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் சொல்லாமல் தவித்து வந்துள்ளார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளர்.

    இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் கார்த்திகா, மனோகரி ஆகியோர் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தாயின் 2-வது கணவர், கட்டிட தொழிலாளி முருகானந்தம் ஆகியோர் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மாணவியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கார்த்திக், கட்டிட தொழிலாளி முருகானந்தம் ஆகியோரை கைது செய்தார்.

    மாணவி பல ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×