என் மலர்
உள்ளூர் செய்திகள்

எர்ணாவூரில் குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை அடித்து கொன்ற தம்பிகள்
- ஏற்பட்ட மோதலில் அவர்கள், அண்ணன் ஹரிஷ் குமாரை செங்கலால் சரமாரியாக தாக்கி விட்டு சென்று உள்ளனர்.
- அண்ணனை அடித்து கொன்றதாக கிறிஸ்டோபர், எண்ட்ரீஸ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூர்:
எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் ஹரிஷ் குமார் (வயது52). சென்னை துறைமுகத்தில் ஒப்பந்ததாரான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹரிஷ் குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் குமார் இறந்து போனார்.
இது தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை செய்த போது நேற்று முன்தினம் இரவு ஹரிஷ் குமார் குடிபோதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்டதை அவரது தம்பிகள் கிறிஸ்டோபர், எண்டரீஸ் குமார் ஆகியோர் கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட மோதலில் அவர்கள், அண்ணன் ஹரிஷ் குமாரை செங்கலால் சரமாரியாக தாக்கி விட்டு சென்று உள்ளனர். இதில் காயம்அடைந்த ஹரிஷ் குமார் இறந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து அண்ணனை அடித்து கொன்றதாக கிறிஸ்டோபர், எண்ட்ரீஸ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.






