search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் அனைத்துக் கட்சி கூட்டம்- ஓ.பி.எஸ். அணியை அழைக்காமல் கைவிட்ட தேர்தல் ஆணையம்
    X

    ஈரோட்டில் அனைத்துக் கட்சி கூட்டம்- ஓ.பி.எஸ். அணியை அழைக்காமல் கைவிட்ட தேர்தல் ஆணையம்

    • நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம்.
    • தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அழைப்பு விடுத்து இருந்தார்.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் துரைசாமி என்பவர் கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அழைப்பு கிடைக்காததால் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர் முருகானந்தம் கூறும்போது, கலெக்டரிடம் இருந்து முறையான அழைப்பு கடிதம் வராததால் கலந்து கொள்ளவில்லை.

    நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம். இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் எங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. விரைவில் தேர்தல் பணிகளை தொடங்குவோம் என்றார்.

    அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறினார்கள்.

    கட்சி அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியினரின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×