search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
    X

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

    • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
    • கூட்டத்தில் 75 மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 75 மாவட்ட கழக செயலாளர்கள், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை இந்த ஆண்டு பிரமாண்டமாக கொண்டாடுவது, பாராளுமன்ற தேர்தல் பணி குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×