search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்
    X

    ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்

    • தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பாக அ.தி.மு.க. சின்னத்தை வரைந்ததற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • போலீசார் அ.தி.மு.க.வினரிடம் இப்பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு, கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அதே சமயம் கருங்கல்பாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகே கமலா நகர் செல்லும் வீதியில் தி.மு.க. தேர்தல் பணிமனை உள்ளது.

    அந்த பணிமனையின் முன்பாக அ.தி.மு.க.வினர் அவர்களது சின்னத்தை கோலமாக வரைந்து வைத்து பிரசாரத்துக்காக காத்திருந்தனர். தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பாக அவர்கள் அ.தி.மு.க. சின்னத்தை வரைந்ததற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க.வினரிடம் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இந்த வழியாக நீங்கள் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் அதை கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் அ.தி.மு.க.வினரிடம் இப்பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அங்கேயே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×