என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே பா.ஜனதா பிரமுகரை தாக்கிய கும்பல்
    X

    காயமடைந்த ராம்குமார்.

    திண்டுக்கல் அருகே பா.ஜனதா பிரமுகரை தாக்கிய கும்பல்

    • ராம்குமாரை மடக்கிய கும்பல் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
    • சின்னாளபட்டி போலீசில் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ராம்குமார்(39). இவர் ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் பா.ஜனதா ஓ.பி.சி அணி மாவட்ட செயலாளராக உள்ளார். அப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. ராம்குமார் தனது உறவினர் விக்னேசுடன் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் 2 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தப்பிஓட முயன்றனர். ஆனால் ராம்குமாரை மடக்கிய கும்பல் கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசில் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் அவரை தாக்கிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த ராம்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×