என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுயதொழில் தொடங்குவதாக கூறி வங்கியில் கடன் வாங்கி ரூ.9 லட்சம் மோசடி
    X

    சுயதொழில் தொடங்குவதாக கூறி வங்கியில் கடன் வாங்கி ரூ.9 லட்சம் மோசடி

    • கடனை செலுத்தாமல் இருந்ததால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் மத்திய அரசு திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க உள்ளதாக அதற்கு எந்திரம்வாங்குவதாக கடந்த 2022-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள வங்கி கிளையில் ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

    ஆனால் வாங்கிய கடனை செலுத்தாமல் இருந்ததால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது ஆவணத்தில் தெரிவித்துள்ள முகவரியில் ஆய்வு செய்தபோது அங்கு எந்திரம் இல்லை. இதனால் பொய்யான தகவல் கொடுத்து கடன் பெற்றது உறுதியானது. இது குறித்து வங்கியின் மண்டல உதவி பொது மேலாளர் ஏ.கே பூமா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×