என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே கர்ப்பிணி மனைவியை தாக்கிய ராணுவ வீரர் கைது
- போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரர் மணிகண்டனை கைது செய்தனர்.
- போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரர் மணிகண்டனை கைது செய்தனர்.
நெல்லை:
கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த கரிசல்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30).
இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது சிவரஞ்சனி 2-வது கர்ப்பமாக உள்ளார். மணிகண்டன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிவரஞ்சனி தனது பெற்றோர் வீடான சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த மணிகண்டன் நேற்று தனது மனைவி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவர் கர்ப்பிணியான சிவரஞ்சனி இடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்ததோடு வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து சிவரஞ்சனி சின்னக்கோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரர் மணிகண்டனை கைது செய்தனர்.






