search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் கூற முடியாமல் அமைச்சர்கள் திணறல்- நடிகர் ராதாரவி
    X

    அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் கூற முடியாமல் அமைச்சர்கள் திணறல்- நடிகர் ராதாரவி

    • சினிமாத்துறையில் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ளது.
    • பெரிய படங்களை வாங்க ஆட்கள் இல்லை. தயாரிப்பாளர்களுக்கு பணம் கிடைக்க வேண்டிஉள்ளது.

    பழனி:

    பழனி மலைக்கோவிலுக்கு நடிகர் ராதாரவி சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவருடன் பக்தர்கள் ஆர்வமுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். முகூர்த்த நாள் என்பதால் திருமணம் செய்து கொண்ட பக்தர்களும் நடிகர் ராதாரவியுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மணமக்களுக்கு ராதாரவி அன்பளிப்பு வழங்கினார்.

    அதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    சிதம்பரம் கோவிலில் வரவு-செலவுகள் அரசால் செய்யப்படுபவை அல்ல. நூற்றாண்டுகால பழக்கவழக்கங்களை மாற்ற தி.மு.க அரசு முயற்சிக்கிறது. இது தவறான முன்உதராணத்தை ஏற்படுத்திவிடும். தி.மு.க ஆட்சியில் ஓராண்டு பல சாதனைகளை செய்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் எந்தவித சலுகையும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

    சினிமாத்துறையில் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ளது. பெரிய படங்களை வாங்க ஆட்கள் இல்லை. தயாரிப்பாளர்களுக்கு பணம் கிடைக்க வேண்டிஉள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    நான் அவரை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×