search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலையூரில் என்ஜினீயர் வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை
    X

    சேலையூரில் என்ஜினீயர் வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை

    • வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • கொள்ளையர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த வேங்கைவாசல், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாபு. என்ஜினீயரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேளாளராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா. தனியார் பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை அவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் கல்லூரி முடிந்ததும் பாபுவின் மகள் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோக்களில் இருந்த 75 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்து.

    இதுகுறித்து சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகையை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது.

    கொள்ளையர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×