search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவரை பிரியும் அளவுக்கு கண்ணை மறைத்த கள்ளக்காதல்- தொழிலாளியின் காம இச்சைக்கு ஆளாகி 3 வயது குழந்தை உயிரிழந்த கொடூரம்
    X

    கைதான குழந்தையின் தாய் திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன், அவரது நண்பர் பழனியப்பன்.

    கணவரை பிரியும் அளவுக்கு கண்ணை மறைத்த கள்ளக்காதல்- தொழிலாளியின் காம இச்சைக்கு ஆளாகி 3 வயது குழந்தை உயிரிழந்த கொடூரம்

    • முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் குழந்தையை 108 ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயரிழந்தது.
    • இதுகுறித்த தகவலின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விராலிமலை:

    ஈரோட்டை சேர்ந்தவர்கள் சீனிவாசன்-திவ்யா தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருந்தனர். சீனிவாசன் கூலி வேலைக்கும், திவ்யா அங்குள்ள ஒரு செங்கற்சூளைக்கும் வேலைக்கு சென்று வந்தனர்.

    அதே சூளையில் வேலைபார்த்த ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியான ஜெகன் என்பவருடன் திவ்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வயது குறைந்தவர், மாற்றுத்திறனாளி என்பதையெல்லாம் மறந்து அவருடன் ஒன்றாக வாழ முடிவு திவ்யா முடிவு செய்தார்.

    இதையடுத்து 3 வயது மகளை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு கள்ளக்காதலன் ஜெகனுடன் ஈரோட்டை விட்டு வெளியேறி கள்ளக்குறிச்சியில் குடியேறினர். அங்கும் செங்கற்சூளை வேலைக்கு சென்ற இந்த ஜோடி ஊர் பிடிக்காததால் அங்கிருந்து கடந்த மாதம் 29-ந்தேதி மதுரை மாவட்டம் அய்யூர் பகுதியில் குடியேறினர்.

    அப்போது ஜெகனின் நண்பரான பழனியப்பன், இவர்களுடன் ஒரே வீட்டில் தங்கினார். இதில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்த பழனியப்பன் தனது காம இச்சைக்கு ஒன்றுமறியாத 3 வயது குழந்தையை பயன்படுத்த தொடங்கினார்.

    இதைப்பார்த்த தாய் திவ்யா கண்டித்தார். ஆனால் ஜெகன் கண்டுகொள்ளாததோடு, பழனியப்பனை கண்டிக்க கூட இல்லை. இதில் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல் நாளுக்கு நாள் மிகவும் சோர்வடைய தொடங்கியது.

    கடந்த 1-ந்தேதி குழந்தையின் தந்தையிடமே மகளை ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்த திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன் மற்றும் பழனியப்பன் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டனர். வழியில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் விராலிமலை அருகே கொடும்பாளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் குழந்தையை 108 ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில் 3 வயது குழந்தை பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதற்கிடையே குழந்தை இறந்த தகவல் கிடைத்ததும் தாய் திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன், பழனியப்பன் ஆகிய 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இறந்த குழந்தையின் உடலை வாங்க கூட வரவில்லை.

    இந்த நிலையில் திவ்யாவின் சகோதரர் ஆறுமுகம் என்பவர் மூலம் திருச்சியில் தங்கியிருந்த திவ்யாவை பிடித்த போலீசார், மற்ற இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தீவிர விசாரணை நடத்தினார்.

    விராலிமலை போலீஸ் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இன்று காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொஞ்சமும் இரக்கமின்றி தனது காம இச்சையால் 3 வயது குழந்தையின் உயிரை பறித்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×