search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்கறி லாரியில் பதுக்கி குட்கா கடத்திய 3 பேர் கைது
    X

    காய்கறி லாரியில் பதுக்கி குட்கா கடத்திய 3 பேர் கைது

    • 2 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • மினி லாரிகளில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் லோடு வாகனங்களில் பொருட்களுக்கு இடையே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு அவ்வப்போது சோதனையின் போது சிலர் சிக்கி கொள்கின்றனர்.

    இந்நிலையில் காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வரும் மினி லாரியில் குட்கா கடத்தி கொண்டுவரப்படுவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. உடனடியாக போலீசார் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே காய்கறிகளை ஏற்றி சென்ற 2 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 32 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 3.35 லட்சம் என்பதும், மொத்த எடை 391 கிலோ என்றும் தெரியவந்தது. இதையடுத்து மினி லாரிகளில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கீழப்பாவூரை சேர்ந்த முருகன்(31), ஆரியங்காவூர் சத்தியமூர்த்தி (35) மற்றும் அரியப்புரத்தை சேர்ந்த முருகன் (39) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×