search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில்  சுவாமி -அம்பாள் வீதி உலா
    X

    சுவாமி- அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சுவாமி -அம்பாள் வீதி உலா

    • செண்பகவல்லி அம்பாள் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாளை (15-ந்தேதி) வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி யளிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் விழாகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. 9-ம் திருநாள் மண்டகப்படி வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் நேற்று இரவு நடைபெற்றது. மெயின் ரோட்டில் உள்ள வணிகவைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட 9-ம் திருநாள் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு வானவேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    இதில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், சங்கத் துணைத் தலைவர் பரமசிவம், மணிமாறன், மாதவராஜ், கருப்பசாமி, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், மகாலிங்கம், குன்னிமலை ராஜா, முனிய செல்வம், தங்கமாரியப்பன், செல்வம், மாரிச்செல்வம், மாரி செல்வகுமார், சுந்தர், சுபாஷ், காளிதாஸ், மதன், மாரிமுத்து, செல்வா, முன்னாள் சங்கத் தலைவர்கள் காளியப்பன், பூவலிங்கம், பழனி குமார், ஆயில் மில் சுரேஷ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    10-ம் திருநாளான இன்று மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 11-ம் திருநாளான நாளை இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வானவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங்கரிக்கபட்ட தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

    Next Story
    ×