search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் இன்று டீக்கடையில் திடீர் தீ விபத்து
    X

    பாளையில் இன்று டீக்கடையில் திடீர் தீ விபத்து

    • பாளையை சேர்ந்தவர் செய்யது அப்துல்ரகுமான் பாளை மார்க்கெட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்
    • ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

    நெல்லை:

    பாளையை சேர்ந்தவர் செய்யது அப்துல்ரகுமான். இவர் பாளை மார்க்கெட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை வழக்கம்போல் கடை திறக்கப்பட்டது.

    திடீரென கடையில் இருந்த சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் கடையின் மேற்கூரை எரிந்து சேதமாகியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    Next Story
    ×