search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி பள்ளியில் தமிழ்நாடு எழுத்து வடிவில் அமர்ந்து சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவிகள்
    X

    தமிழ்நாடு எழுத்து வடிவில் அமர்ந்து சாதனை முயற்சியில் ஈடுபட்ட கோவில்பட்டி பள்ளி மாணவிகள்.

    கோவில்பட்டி பள்ளியில் தமிழ்நாடு எழுத்து வடிவில் அமர்ந்து சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவிகள்

    • தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
    • கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.

    கோவில்பட்டி:

    1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பின்பு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க ஆலோசிக்கப் பட்டது. 1956 ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டது. அவரவர் மாநிலங்களுக்கு அவரவர் விரும்பிய பெயர்கள் சூட்டப்பட்டது.

    தமிழ்நாட்டுக்கு மதராஸ் என்ற பெயரே நீடித்தது. மதராஸ் மாகாணம் தமிழ்நாடு எனும் பெயர் சூட்ட பல போராட்டங்கள் நடைபெற்றது. தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். 1957-ல் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைக்க தி.மு.க. சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தது. பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் அது தோல்வியில் முடிந்தது.

    1967-ல் தி.மு.க. அரசு அமைந்த போது ஜூலை 18-ந் தேதி சட்டமன்றத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் அண்ணா பெரும்பான்மை ஆதரவுடன் மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறை வேற்றினார். அதனைத் தொடர்ந்து 1968-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி அதிகா ரப்பூர்வமாக மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என அறிவிக்கப் பட்டது.

    இதனை நினைவு கூறும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன்படி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு என்ற பிரமாண்ட எழுத்து வடிவில் அமர்ந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், மேனாள் ஓவிய ஆசிரியர் வேல்முருகன் உள்பட பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×