search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பிக்க குவிந்த மாணவர்கள்
    X

    கோவை அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பிக்க குவிந்த மாணவர்கள்

    • கல்லூரியில் நடப்பாண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்படுகிறது.
    • 6-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.

    கோவை,

    தமிழகத் தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்ப டிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் கடந்த 8-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிஎஸ்சி கணிதம், இயற்பி யல், தாவரவியல், பிகாம் உள்ளிட்ட 23 படிப்பு கள் வழங்கப்படுகிறது. நடப்பா ண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்ப டுகிறது. இதற்கு www. tngasa.in என்ற இணை யதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்ட ணம் இல்லை. பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

    இதனை தொடர்ந்து வருகிற 26-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. மேலும், தமிழக அளவில் சென்னை மாநில கல்லூரி மற்றும் கோவை அரசு கலைக்கலூரிக்கு அதிக ளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    சிறப்பு பாடமான பாதுகாப்பு துறை பாடத்திற்கும் நீலகிரி, கோவை அரசு கலைக்கல்லூரிக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பி த்துள்ளனர். தவிர, பிகாம், பிகாம் சிஏ. பிஎஸ்சி கணினி அறிவியல் பாடத்திற்கு மாணவர்கள் மத்தியில் அதிகளவில் ஆர்வம் உள்ளது.

    இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏராளமான மாணவர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் விண்ணப்பிக்க ஊழியர்கள் உதவி களை செய்தனர்.

    Next Story
    ×