search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் விழிப்புணர்வுக்காக நடந்த மாரத்தான் போட்டியில் உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்
    X

    கோவையில் விழிப்புணர்வுக்காக நடந்த மாரத்தான் போட்டியில் உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்

    • தேசிய இளைஞர் தின திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக மாரத்தான் போட்டி நடந்தது.
    • நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவை,

    தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் தின திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக மாரத்தான் போட்டி நடந்தது.

    கோவையிலும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த மாரத்தான் ஓட்டம் அவிநாசி சாலை, பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அண்ணா சிலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தது.

    இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் திருநங்கைகள் என பலரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

    Next Story
    ×