search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிக்கு பாலியல் தொல்லை - புகார் கொடுக்காததால் கைதில் இருந்து தப்பிய ஆசிரியர்
    X

    கோப்புபடம்

    மாணவிக்கு பாலியல் தொல்லை - புகார் கொடுக்காததால் கைதில் இருந்து தப்பிய ஆசிரியர்

    • பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • பெற்றோர் பிரச்னைகள் வேண்டாம் என புகார் அளிக்க மறுத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சேகாம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சேகாம்பாளையம்,உப்பிலிபாளையம் அருள்புரம், பகுதியை சேர்ந்த 200 மேற்பட்ட மாணவ,மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக பழனிச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் கணித ஆசிரியராக செந்தாமரை கண்ணன்,(வயது 57)என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன்.13 முதல் பள்ளி திறக்கப்பட்டு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கணித ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.அதனைத் தொடர்ந்து பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர்( பொறுப்பு ) ஆனந்தி மற்றும் பல்லடம் போலீசார் பள்ளிக்குச் சென்று மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.மாணவிகள் அளித்த புகார் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் திருவளர்செல்வி, ஆசிரியர் செந்தாமரைக்கண்ணனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பான கூடுதல் விசாரணை மேற்கொள்ள குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    குழந்தைகள் நல அமைப்பு மாவட்ட அதிகாரிகள், பல்லடம் மகளிர் போலீசார், மாணவிகள் சிலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் சில்மிஷங்களில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.ஆனால், அதை எழுத்துப்பூர்வமாக புகார் வடிவில் வழங்குமாறு போலீசார் கூற, மாணவிகள் பெற்றோரின் சம்மதம் இன்றி வழங்க முடியாது என மறுத்து விட்டனர்.இதேபோல், பெற்றோரும் பிரச்னைகள் வேண்டாம் என புகார் அளிக்க மறுத்தனர். மாணவிகள்,பெற்றோர்கள் புகார் அளிக்க மறுத்ததால், ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தற்போது தப்பிஉள்ளார்.

    Next Story
    ×