search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் லாரியை நிறுத்தி தாசில்தார் ஆய்வு
    X

    மணல் லாரியை நிறுத்தி தாசில்தார் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

    மணல் லாரியை நிறுத்தி தாசில்தார் ஆய்வு

    • மணல் ஏற்றி செல்லும் லாரிகள் அதனை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கிறது.
    • அந்த லாரிக்கு அபராதம் விதிக்க சீர்காழி காவல்து றைக்கு பரிந்துரைத்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளுர், பாலுரான் படுகை ஆகிய இடங்களில் மணல் குவாரி அமைக்கப்பட்டு ஆன்லைன் பதிவு செய்து மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த மணல் குவாரியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மணல் ஏற்றி செல்லும் லாரிகள் அதனை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கிறது.

    இதனால் அந்த சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இந்நிலையில், வழக்கம்போல் மணல் குவாரியில் இருந்து திருநகரிக்கு மணல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.

    அந்த லாரி சீர்காழி சூரக்காடு வழியாக கலெக்டரின் ஆய்விற்கு சென்று கொண்டிருந்த தாசில்தார் செந்தில்குமார் லாரியை வழிமறித்து நிறுத்தினார்.

    பின், ஆவணங்களை ஆய்வு செய்து விட்டு தார்ப்பாய் கொண்டு மூடாமல் மணல் ஏற்றி சென்றதை அறிந்து அந்த லாரிக்கு அபராதம் விதிக்க சீர்காழி காவல்து றைக்கு பரிந்துரைத்தார்.

    அதேபோல், அவ்வழியாக வந்த மற்ற லாரிகளையும் நிறுத்தி அபராதம் விதிக்க காவல்துறைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தார்.

    இதனை அறிந்த மற்ற லாரிகள் மாற்று பாதை வழியாக திருப்பிக்கொண்டு சென்றனர்.

    Next Story
    ×