என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை
    X

    அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை செய்த பக்தர்கள்.

    அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை

    • 18 வகையான வாசனை திராவியங்கள் கொண்டு அபிஷேகம்.
    • 200-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் கிராமத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோவில் வளாகத்தில் அய்யப்பன் சாமிக்கு தனி சன்னதி உள்ளது.

    இங்கு கார்த்திகை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சம்வஸ்திரா அபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக அய்யப்ப சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திராவியங்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு அய்யப்பன் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×