என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சக்கரத்தாழ்வார்.
தஞ்சை ராஜகோபாலசாமி கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம்
- கோவில் உட்பிரகாரத்தை 24 முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள ராஜ கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்குள்ள 16 கரங்களுடைய சக்கரத்தாழ்வார் 16 வகையான செல்வங்களை தருவதாக ஐதீகம்.
பக்தர்கள் இக்கோவில் உட்பிரகாரத்தை 24முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் இன்று புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தனர்.
Next Story






